Wednesday, September 19, 2018

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கும் பால் மா விலையை குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று


19.09.2018

சமையல் எரிவாயு விலையை 195 ரூபாவால் அதிகரித்தல் மற்றும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைத்தல் என்பற்றுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனேகே தெரிவித்துள்ளார்.

எனினும் திருத்தப்பட்ட விலைகள் அமுலாகும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தமை மற்றும் இலங்கை நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி ஆகியவற்றால் எரிவாயுவிலையை 323 ரூபாவால் அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இதன் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், பால்மாவின் விலையை குறைப்பதற்கும் வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி 1 கிலோ எடைகொண்ட பால் மா பொதி ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்படும்.

நேற்று மாலை நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவின் கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment