January 17, 2019
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்குத் தேவையான தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதமொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
"conveying current news to people the world over"
January 16, 2019
கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
துறைமுக நகரின் எதிர்கால அபிவிருத்திகளை விரைவாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரத்திற்காக கடலை நிரப்பும் நடவடிக்கையின் காரணமாக, சில பிரதேசங்களில் கடற்கரைகள் அரிப்புக்குள்ளாவதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க இதன் போது தெரிவித்த வேளை துறைமுக நகரத்தின் நிர்மானப்பணிகளை முன்னெடுத்துவரும் சீன நிறுவனத்தின் ஊடாகவே குறித்த பகுதிகளை புனரமைக்க தீர்மானித்துள்ளதாக சீன தூதுவர் Cheng Xueyunan பதில் அளித்துள்ளார்.
நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதனை சம்பிரதாயபூர்வமாக அறிவிப்பதற்கான நிகழ்வு துறைமுக நகரில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
January 16, 2019
ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் அமைந்துள்ள காரியாலயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தற்பொழுது கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ரேணுகா கட்டிடத் தொகுதியில் இல.41 இல் அமைந்துள்ள இந்தக் காரியாலயம் எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய காரியாலயம் கொழும்பு 10, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத் தொகுதியின் 03 ஆவது மாடி, இல. 35 இல் அமையப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்துக்கு வருகை தருபவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
January 16, 2019
2018 ஆம் வருடத்தில் புதிதாக அதிகளவான வாகனங்கள், மோட்டார் வாகன திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை 4 இலட்சத்து 80,799 ஆகும் .
இதற்கமைய கடந்த வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டில் மொத்தமாக 7,727,921 ( 77 இலட்சத்து 27,921) வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ( நாட்டு மக்கள் தொகை சுமார் 2 கோடி)
கடந்த 2017 ஆம் ஆண்டில் 4,516,503 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 29,146 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
16.01.2019
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்
பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்காட - மஸ்சென்ன பகுதியில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உரிமையாளர் வீட்டில் நாய் இல்லாத நிலையில் அதனை தேடிய போது அயல் வீட்டில் இருந்து நாயின் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நாய் அங்கிருந்து மீட்கப்பட்டு மிருக வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்ட போதும் அது உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட
இந்நிலையில், 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் நாயினை துஷ்பிரயோகம் செய்த பின்னர் அதனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
.
16.01.2019
அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சி, ஆயிஷா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த U.L.முஹம்மது றெளபீக் என்பவர் இன்று (16) புதன்கிழமை காலை கொழும்பில் காலமானார்,
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் அக்கரைப்பற்றிலிருந்து 40நாள் ஜமாஅத் சென்று ஜமாஅத் காலப் பகுதியை முடித்துவிட்டு இன்று காலை ஊருக்கு வருவதற்காக மருதானை ரயில்வே நிலையத்திற்கு வந்த போது அங்கே ரயிலுடன் மோதி வபாத்தானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
கல்முனைடுடே
January 16, 2019
கடந்த வருட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாதத்தின் இறுதியில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
மீள்பரிசீலனை பெறுபேறு மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
January 16, 2019
இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளமூலமான நுழைவாயில் அனுமதிக்கான சீட்டை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அஜித் பி பெரேரா ஆகியோர் தலைமையில் இன்று இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ஈ-நுழைவாயில் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலகுவாக தேசிய பூங்காவை பார்ப்பதற்கான வசதி கிட்டும். முதல் முறையாக வில்பத்து தேசிய பூங்காவுக்காக இந்த இணையத்தளம் மூலமான அனுமதிச் சீட்டு நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
January 16, 2019
நூற்றுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலின் பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை அடுத்து, அமைச்சுக்களின் கீழ்வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதில் தற்போது வரை இழுபறிநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
January 16, 2019
மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
வட மத்திய, சப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. தமது கட்சி தேர்தல் வேண்டாம் என்பதற்கு நீதிமன்றம் செல்லவில்லையெனவும், தேர்தலை நடாத்துமாறு கோரியே நீதிமன்றம் செல்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதி, பிரதமர், கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் January 17, 2019 மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்குத் தே...