Saturday, September 29, 2018

சிறுவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு..

29.09.2018

தேசிய சிறுவர் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கைக்கு அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு, அந்த கொள்கை எதிர்வரும் மாதம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இந்த புதிய கொள்கையின் மூலம் சிறுவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் தொடர்பில் பின்பற்றப்படுகின்ற காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை திருத்தவும், நீதிமன்றங்களில் தேங்கியுள்ள சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த புதிய கொள்கை கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment