29.09.2018
மட்டகளப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசன்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு, இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ் தலைமையிலான குழுவினர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது அவர்களுக்கு இடையில், அரை மணிநேரம் உரையாடல் இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிள்ளையான் சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Hiru
0 comments:
Post a Comment