21.09.2018
மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் இரண்டு மாத கால அவகாசம் தேவை என மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்விற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவைப்பாடு உள்ளமையினாலேயே இந்தக் கால அவகாசம் தேவை என்றும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே எல்லை நிர்ணயம் தொடர்பான குழு விடயத்தை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவேண்டியது அவசியமானது என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment