September 29, 2018
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 90 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் எஞ்சியிருப்பது 7200 பேருக்கான அடையாள அட்டைகள் மாத்திரமே எனவும், அதுவும் அடுத்து வரும் நாட்களில் தயார் செய்து வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் செயற்முறைப் பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இப்பரீட்சைக்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட முடிந்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் தடவை எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment