Monday, September 24, 2018

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை…!

SEPTEMBER 24, 2018

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதற்கு, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளாரென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், நேற்று (23) தெரிவித்தார்.

ஏற்கெனவே, கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு, நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தும், நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், தொண்டர் ஆசிரியர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, அமைச்சரவை அங்கிகாரம் பெற்ற 440 பேருக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02, 03, 04ஆம் திகதிகளில், தொண்டர் ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக நேர்முகப்பரீட்சை நடத்தப்படவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கான, நிரந்தர நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமெனவும், கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உறுதியளித்துள்ளாரெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

நிரந்தர நியமனம் கோரி, தொண்டர் ஆசிரியர்கள், பல போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment