Friday, September 28, 2018

உலகின் பல்வேறு நாடுகளை சுனாமி தாக்கும் அபாயம் ; அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம்…!

SEPTEMBER 27, 2018

உலகின் சில முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என அமெரிக்கா வெர்ஜீனியா தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அந்த வகையில், குறிப்பாக தென் சீனக்கடல் பகுதியின் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா முதற்கொண்டு, உலகின் பல்வேறு நாடுகளை சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணமே பருவ காலநிலை மாற்றம் தான் என கூறப்படுகிறது.

பூமியில் வெப்பநிலை தொடர்ந்து கூடி வருவதால், உலகம் முழுவதும் உள்ள பனிமலை உருக தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர தொடங்கி உள்ளது.

குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க, கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் விரைவில் நிலநடுக்கம் ஏற்பட  வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சுமார் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.


இவ்வாறு நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி ஏற்படும் நிலை உருவாகும்.

சுனாமி ஏற்பட்டால், தென் சீனக்கடல் பகுதியில் உள்ள மணிலாவில் தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கடல் சூழ்ந்துள்ள சிறிய நாடுகள் சுனாமியால் பாதிக்கும்  வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment