Friday, September 21, 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவர் பதவி தயாசிறிக்கு


21.09.2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனுடன் கடுவலை தொகுதியின் இணை தொகுதி அமைப்பாளர்களாக ஜி.எச்.புத்ததாசவும், ஹெக்டர் பெத்மகேவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளிவ் டி. ஜே செனவிரத்ன, லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் இன்றைய தினம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment