25.09.2018
பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் நாலக்க டி சில்வா தொடர்பில் ஊழல் எதிர்ப்பு அமைப்பினால் வௌிப்படுத்தப்பட்ட குரல் பதிவினை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றின் நீதவான் லங்கா ஜயரத்ன இந்த அனுமதியினை வழங்கியுள்ளதோடு, நாளை முற்பகல் 10 மணிக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த குரல் பதிவுகள் சம்பவத்துடன் தொடர்புடைய இருவருடையதாக என நிரூபித்துக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment