Monday, September 24, 2018

வெளிநாட்டிலிருந்து எடுத்துவரப்படும் உணவுப் பொருட்களுக்கு நற்சான்றிதழ் அவசியம்- சுங்கம்

September 24, 2018

உணவுக்கான தாவரங்கள், விலங்குகளின் இறைச்சி சதை மற்றும் பழங்கள் என்பவற்றை  வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரும் போது, கொள்வனவு செய்த நாட்டிலிருந்து பெறப்பட்ட பயன்படுத்துவதற்குப் பொருத்தமானது என்ற ஏற்றுக் கொள்ளத்தக்க நற்சான்றிதழ் அவசியம் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது.

அவ்வாறு நற்சான்றிதழ் இல்லாத இந்த வகைப் பொருட்கள் அனைத்தும் விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பிரிவின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment