Saturday, September 22, 2018

போதைப்பொருள் வியாபாரத்தினை கட்டுப்படுத்த விசேட ஏற்பாடுகள்

22.09.2018

பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் வியாபாரத்தினை கட்டுப்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளை அண்டி இடம்பெறுகின்ற போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் மற்றும் அதனை மையப்படுத்திய வன்முறைகள் குறித்து எமது செய்திச் சேவை சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவை தொடர்புகொண்டு வினவியிருந்தது.

இதன்போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரத்தினை கட்டுப்படுத்துவதற்கான விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாடு முழுவதிலும் இடம்பெறுகின்ற போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு விசேட, சுற்றிவைளப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் தற்போது போதைப்பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment