23.09.2018
நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட 25 இளைஞர்கள் கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை, ஹட்டன் குற்றபுலனாய்வு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
20 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்ட அவர்கள், கொழும்பு, காலி, மாத்தறை, மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை , திருகோணமலை சிறிமா புறப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 2 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை , திருகோணமலை மாவட்டத்தில் 5 காவல் நிலையங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 13 சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment