Thursday, September 27, 2018

சட்ட மா அதிபருடன் கலந்துரையாடல் நடத்தவுள்ள தலதா அத்துகோரல

27.09.2018

அரசியல் கைதிகள் விடயமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சட்ட மா அதிபருடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனுராபுரம் சிறையில் 8 அரசியல் கைதிகள் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்கள் தொடர்பில் நேற்றையதினம் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது.

நீதியமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோருடன் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றி இருந்தார்.

இதன்போது ஜனாதிபதி நாடு திரும்பியப் பின்னர் இதுதொடர்பில் மீண்டும் கூடி ஆராய்வதாக முடிவு செய்யப்பட்டது.

அதேநேரம் வரும் செவ்வாய்கிழமை சட்ட மா அதிபர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு நீதி அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment