23.09.2018
வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வேறொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
ஆவா குழுவினரை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர், அரசாங்கத்தின் அனுமதியை கோரியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கில் அவ்வாறான ஒரு குழு இருந்தால், அவ்வாறு எந்த அனுமதியும் பெறப்படுவதில்லை.
எனினும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்துவதற்கு அனுமதி கோரப்படுகிறது.
வன்முறைகளை கட்டுப்படுத்த காவற்துறையினருக்கு தேவையான நேரத்தில், இராணுவத்தினரின் உதவியை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வடக்கிற்கும், தெற்கிற்கும் வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment