Wednesday, September 26, 2018

அது ஒரு குடும்பமா? 2 கல்யாணம் செய்த எனது அப்பாவுக்கு எந்த தகுதியும் கிடையாது! தன் குடும்பத்தை கிழிக்கும் வனிதா விஜயகுமார் 

'
September 26, 2018


எனது தந்தை விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், அவர் எனது வாழ்க்கை குறித்து கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது என மகள் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

எனது குடும்பத்துக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கிறேன் இதன் காரணத்தினாலேயே எனக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது.

எனது சகோதரிகள் எனக்கு பிரச்சனையில்லை, ஆனால் அவர்கள் பின்னணியில் இருக்கும் ஆண்கள் தான் என்னுடன் மோதுகிறார்கள். அண்ணன் அருண் விஜய் எனது தந்தைக்கு அழுத்தம் தருகிறார். மருமகன் ஹிரியும் தனது வேறு பக்கம் அழுத்தம் தருகிறார்.

எனது குடும்பத்தில் நான் மிகவும் தைரியமானவள். என்னுடைய இந்த குணம் அவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம். எனது அம்மா பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று புது சொத்து வாங்குவார் எனது தந்தை.

வாங்கப்பட்ட புது சொத்தில் ஆடிட்டிங் பிரச்சனை இருப்பதாக கூறி எனது அம்மாவை நம்ப வைத்து அந்த சொத்தினை அவரது முதல் மனைவி முத்து கண்ணு அவர்கள் பெயரில் எழுதிவைப்பார். அதன் பின்னர் அந்த சொத்து அப்படியே அருண் விஜய் பெயரில் மாற்றப்படும்.

எனது தந்தை சம்பாதித்த பணத்தை அண்ணன் அருண் விஜய் அழித்துவிட்டார். அவருக்கெல்லாம் இப்போது படங்களில் சான்ஸ் கிடைப்பதே பெரிய விசயம். இதில் அவருக்கு வருமானம் எப்படி வரும்.

எனது தந்தையிடம் இருந்து அவரும், அவரது அம்மாவும் பணத்தினை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதுதான் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நான் பயந்து ஓடவேண்டும், இதுதான் அவர்கள் என்னை எதிர்பார்க்கிறார்கள்.

நான் இரண்டு திருமணம் செய்துகொண்டதை பற்றி பேசுகிறார்கள், அப்படியென்றால் எனது அப்பாவுக்கு இரண்டு மனைவி. அவர் ஒன்றும் ஸ்ரீராமபுத்திரன் கிடையாது. அவருககு என்னை பற்றி கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.

நான் வசிப்பது குடும்பமே கிடையாது. எனது அண்ணன் அருண் விஜய்யை ஆம்பளையா என்று கேட்கிறேன், ஆனால் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிடுகிறார்.

தேவையில்லாமல் இந்த வயதில் எனது தந்தை இப்படி நடந்துகொள்கிறார். நான் எனது அப்பாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி சம்பாதித்து யாருக்கு கொடுக்கப்போகிறீர்கள். அமைதியாக இருங்கள் என கூறிவிட்டேன். ஆனால் அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment