December 31, 2018
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் வெளியிடப்படுமென்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்திலும் குறித்த விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment