September 24, 2018
மாலைத்தீவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
நேற்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பில் 92 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.
எனினும், இந்த தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒரு வார காலத்திற்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் இந்த ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் இந்த கால அவகாசம் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என வெற்றி பெற்ற எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment