September 24, 2018
டொலரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதனால், எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் விலைச் சூத்துரத்துக்கு அமைவாக மாதாமாதம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.
இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை மாற்றம் இடம்பெறப் போகின்றது. இந்த சூத்திரப் பயன்பாட்டின் போது எரிபொருள் விலை அதிகரிக்குமே அன்றி குறைவடைய வாய்ப்பில்லையென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ரூபாயின் மதிப்பு குறைந்ததன் காரணமாக எரிபொருள் விலை மாத்திரமன்றி, எரிபொருள் ஏற்றிச் செல்லும் போக்குவரத்துக் கட்டணம், எண்ணெய் சுத்திகரிப்புக் கட்டணம் என்பனவும் அதிகரிக்கும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment