Thursday, September 20, 2018

மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் ஞானசார தேரர்


20.09.2018

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 6 வருட சிறைத்தண்டனையை ரத்துச் செய்யுமாறு கோரி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உயர்நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை எதிர்வரும் 28ம் திகதி ஆராய உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

தனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் பெற்றுக்கொடுக்கப்பட்ட தீர்ப்பை ரத்துச் செய்து தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி கலகொடஅத்தே ஞானசாரதேரரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஞானசார தேரர்  மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைத்திருந்த மேன்முறையீட்டு கோரிக்கை கடந்த 31ம் திகதி நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment