Sunday, September 30, 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்; ஒரு வருடத்துக்கு இல்லை


September 30. 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை, ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த முடிவை நிதியமைச்சு எடுத்துள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம், இந்த இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக, நிதி மற்றும் ஊடக அமைச்சு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள், மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச ஊழிர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களுக்கு அமைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் செயற்பாடுகளும் 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஹைபிரிட் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக அதன் பெறுமதிக்கு  கடன்பெறக்கூடிய சதவீதம் 70 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment