Saturday, September 29, 2018

அரச கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளுக்கு நிதி அமைச்சர் எச்சரிக்கை

September 30, 2018

என்டப்பிரைசஸ் ஸ்ரீ லங்கா அபிவிருத்தித் திட்டத்துக்கு ஆதரவு வழங்காத அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தரை பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொழில்துறையில் புதிதாக ஈடுபடுவோருக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள கடன் திட்டத்தை உரிய முறையில் வழங்குவதில் அரச வங்கி பின்வாங்குவதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அமைச்சரிடம் முறையிடப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வங்கியில் புதிதாக கடன் பெற வரும் இளைஞர், யுவதிகளை கடன் வழங்காமல் திருப்பியனுப்பவே வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அவசியமற்ற கேள்விகளை தொடுத்து அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த புதிய கடன் திட்டத்தில் 15 லட்சத்துக்கு குறைவாக கடன் பெறுபவர்களுக்கு யாரும் பிணை நிற்கத் தேவையில்லை. எந்த வங்கியிலாவது அவ்வாறு கோருவதாயின் எமக்கு அறிவியுங்கள். அவ்வாறு கேட்டவரின் பெயர், வங்கியின் பெயர், எந்தக் கிளை என்பதை அறிவியுங்கள். என்டப்பிரைசஸ் ஸ்ரீ லங்கா திட்டத்தின் அவசர தொடர்பு இலக்கம் 2015 ஆகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

0 comments:

Post a Comment