September 21, 2018
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் இருந்தால் உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள 3இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களம்
0 comments:
Post a Comment