22.09.2018
அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இதற்கமைய, அரசியல் அமைப்பு சபையின் ஏனைய பிரதிநிதிகளான, அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டீ.ஜே செனவிரத்ன, விஜித்த ஹேரத் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மூவரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைவதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தாவெல குறிப்பிட்டார்.
எனினும், அரசியல் அமைப்பு சபையின் பிரதிநிதிகளான பிரதமர், சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் பிரதிநிதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட மஹிந்த சமரசிங்க நீடிப்பார் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment