Thursday, September 20, 2018

யுத்தத்துக்குப் பின்னர் சமகாலத்திலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு

20.09.2018

யுத்தத்துக்குப் பின்னர் சமகாலத்திலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்த அளவில் இடம்பெறுவதாக உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டத்தின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு ஜெனீவாவில் நடைபெறுகின்ற நிலையில்இ குறித்த அமைப்பு இதுதொடர்பான அறிக்கை ஒன்றை மாநாட்டில் முன்வைத்திருக்கிறது.

யுத்த காலத்திலும்இ யுத்தத்துக்குப் பின்னரும் தமிழர்கள் பலர் பாதுகாப்பு தரப்பினரால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்இ இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலும்இ தமிழர்களை இலக்கு வைத்து பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment