Sunday, July 15, 2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் வேண்டுகோள்…!


July.15.2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சமையல் எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில்

கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தது. இருப்பினும், உலக சந்தையிலுள்ள விலை மட்டத்தை நோக்கும் போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும், இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் குறிப்பிடுகையில்,
வாயளவில் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் எந்தவொரு நிறுவனத்தினாலும் முன்வைக்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ளது.

எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பில் கருத்தில் கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment