, 30 JULY 2018
பரீட்சையில் தோற்றுவதற்காக துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு பயணித்து கொண்டிருந்த வேளை காத்தான்குடி நகரில் விபத்துக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் இன்று உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி பகுதியை சேர்ந்த 14 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை(24) குறித்த மாணவன் பரீட்சையில் தோற்றுவதற்காக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் சாரதி, கவனயீனமாக கதவை திறந்த போது அதில் மோதியுள்ளார் மாணவர்.
பின்னர் வீதியில் விழுந்த அவர் மீது முச்சக்கரவண்டியொன்று ஏறி சென்றதில் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த மாணவன், மட்டக்களப்பு மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வேனின் சாரதியும், முச்சக்கரவண்டியின் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Hiru
0 comments:
Post a Comment