Saturday, July 28, 2018

இருநாள் வதிவிட செயலமர்வு..

, 28 JULY 2018 -

சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள், நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை பெரும்பான்மையின மக்கள் உணரும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வு இன்று மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பாராது அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையினருக்கு உணர்த்த வேண்டும்.

ஒரு பக்குவப்பட்ட பார்வையுடன் இந்தப் பிரச்சினைகளை அணுகவேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment