Monday, July 30, 2018

துபாயில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர்

July 30, 2018

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு மீண்டும் நாடு திரும்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
எதுவித தண்டப்பணமும் இல்லாமல் நாடு திரும்புவதற்கே இந்த கால அவகாசத்தை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கியுள்ளது.

இதேவேளை காலாவதியான கடவுச்சீட்டுகளை கொண்டவர்கள் டுபாயிலுள்ள தூதரக காரியாலத்தின் மூலம் புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment