JULY 29, 2018
இவ்வருட கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை 321, 469 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்கு சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்வதன் மூலம் அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment