Tuesday, July 24, 2018

பெசிலுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

JULY 2018 -

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ வௌிநாடு செல்ல மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

தனக்கு மருத்துவ சிகிச்சைக்காக வௌிநாடு செல்ல வேண்டும் என அவர் மோஷன் மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் , அது இன்று ஆராயப்பட்ட போது மூன்று மாதங்களுக்கு வௌிநாடு செல்ல மாத்தறை நீதவான் அனுமதி வழங்கினார்.

மாத்தறை – பிரவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி ஒன்றை கொள்வனவு செய்தமைத் தொடர்பில் பணச் சலவை சட்டத்தின் கீழ், காவல்துறை நிதிமோசடி தவிர்ப்பு பிரிவு தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பில், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கு வெளிநாட்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment