Sunday, July 29, 2018

03 ஆம் திகதி அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்- GMOA

July 30, 2018

நாட்டின் பிரச்சினைகளை மையப்படுத்தி தீர்வைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி அடுத்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உட்பட வைத்தியர்களுடன் தொடர்பற்ற அரசாங்கத்தின் உடன்படிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு அமையும் எனவும் அச்சங்க அதிகாரி டாக்டர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள போதிலும், இதுவரையில் எந்தவிதமான தீர்வு நடவடிக்கையும் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைய இந்த பணிப்பகிஷ்கரிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது. 

Daily Ceylon

0 comments:

Post a Comment