Sunday, July 29, 2018

புதிய முறையில் தேர்தலை நடாத்தினால் நாட்டில் ஆட்சி சீர்குலையும்

July 29, 2018

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சித்தலைவர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெறவுள்ளதாக  பெருந்தெருக்கள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை வெற்றியளிக்கவில்லையெனவும்,  இந்த முறையினால் உள்ளூராட்சி சபைகளில் பல்வேறு சிக்கல் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலையும் புதிய முறைப்படி முன்வைத்தால், நாட்டில் ஆட்சி சீர்குலையும் நிலைமை உருவாகும் எனவும் மாவனல்லைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment