Friday, July 27, 2018

கிழக்கு மாகாண ஆரம்ப கல்விப்பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.பீ.தௌபீக் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

27 07. 2018

கிழக்கு மாகாண ஆரம்பக்கல்வி பணியகத்தின் திருகோணமலை மாவட்டத்துக்கான நிறைவேற்றுப் பணிபாளராக ஏ.பீ.தௌபீக் (working Director) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொள்ளாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசிற்கமைவாக முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் ஆதம்பாவா தௌபீக் ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள பணியக மாவட்டக் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப்பணியகத்தின் கீழ் 5 கல்வி வலயத்திலும் உள்ள சுமார் 519 முன்பள்ளிகளும் 654 ஆசிரியைகளும் 2000 ற்கு மேற்பட்ட மாணவர்களும் நிர்வகிக்கப்படிகின்றமை குறிப்பிடத்தக்கது.

1987 ம் ஆண்டின் 42 ம் இலக்க மாகான சபை சட்டத்திற்கமைவாக கௌரவ ஆளுனரினால் இந்நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment