Tuesday, July 31, 2018

கருணாநிதி உடல்நலக் குறைவால் அவதியுற்று வருவதால், மன வருத்தத்தில் தொண்டர் தூக்கிட்டு தற்கொலை….!

JULY 31, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் அவதியுற்று வருவதால், மன வருத்தமடைந்த திமுக தொண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை அடுத்துள்ள வாணிவிலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கன்(65). திமுகவின் தீவிர தொண்டரான இவர், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதை அறிந்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கங்கன் தன் மன வருத்தத்தை நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டபோது, ‘தலைவர் உயிர் போனால், நானும் உயிரோடு இருக்கமாட்டேன்’ என, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை, வாணிவிலாசபுரம், பள்ளிப்பட்டு- பொதட்டூர்பேட்டை சாலை அருகே உள்ள மரத்தில் கங்கன் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். கங்கன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கங்கன் தற்கொலை குறித்து, பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment