July.31.2018
புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்படும் வரையில் பழைய முறை செல்லுப்படியாகும் என்ற அடிப்படையில் அதன் படியேனும் மாகாண சபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அதிகாரம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இவர் நேற்று இதனைத் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை அறிந்துக்கொள்ள பயப்படுகின்றது.
அதன் காரணத்தினாலேயே மாகாண சபை தேர்தலை பிற்போட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் தேர்தலை நடத்தும் முழு அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment