Friday, July 27, 2018

சாரதிக்கு தலைச்சுற்று; யாழ்ப்பாணத்தில் பஸ் பாலத்தில் குடைசாய்ந்தது

27.07.2018

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த 786 இலக்க இ.போ.ச. பஸ் பொன்னாலை பாலத்தில் குடைசாய்ந்துள்ளது.

இன்று(27) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பஸ்ஸை ஓட்டிச் சென்ற சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் அருகில் உள்ள குடிநீர் விநியோக குழாய் பொருத்தப்பட்ட தூணில் குறித்த பஸ் தாங்கி சரிந்து நின்றமையினால் பஸ்ஸில் பயணித்த மக்கள் மயிரிழையில் தப்பினர்.

0 comments:

Post a Comment