Sunday, July 29, 2018

மஹிந்தவுக்குப் பதிலளிக்க ஸ்ரீ ல.சு.க. மாதத்துக்கு 50 ஊடகவியலாளர் சந்திப்பு- புதிய திட்டம்

July 29, 2018

கூட்டு எதிர்க் கட்சி அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஒரு மாதத்துக்கு 50 ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துவதாகவும், இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க் கட்சிகள் முன்வைக்கும் பொய்யான பிரச்சாரங்களுக்கு மத்தியில் மௌனம் சாதித்தால், மக்கள் அந்த பொய்களை நம்பி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்தும் ஆபத்து நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்து வரும் ஒவ்வொரு வாரத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தி, அரசாங்கத்தின் அபிவிருத்தித்  திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கும், கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment