July 26, 2018
குமார சங்கக்கார அரசியலுக்கு பிரவேசித்தால், அவருக்கு முழு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குமார சங்கக்கார, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பில், ஐக்கிய தேசிய முன்னணி கலந்துரையாடியில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடியுள்ளதா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளில்த்தார்.
0 comments:
Post a Comment