Friday, July 27, 2018

டெங்கு நோயினால் 9 ஆயிரத்து 652 பேர் பாதிப்பு

27 JULY 2018 -

கடந்த இரு மாதங்களில் டெங்கு நோயினால் 9 ஆயிரத்து 652 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 ஆயிரத்து 786 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைவடைந்துள்ளதாகவும் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 33.8 வீதமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் உயர் தரப்பரீட்சைகளுக்கு முன்னதாக, பரீட்சைகள் இடம்பெறும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை நடமுறைபடுத்தி வருவதாகவும் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment