JULY 31, 2018
கத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்து வருவது அறிந்தே. அந்த வகையில் போக்குவரத்துத் துறை புதிய அறிவிப்பு ஒன்று (29.07.2018) வெளியிட்டுள்ளது.
கத்தாரில் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துகின்ற குற்றம் அதிகளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2018ம் ஆண்டில் காலண்டில் நுற்றுக்கும் மேற்பட்ட சாரதிகள் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இன்றி சிக்கியுள்ளனர்.
நான்காரவது வாரத்தை எட்டியுள்ள Accident-Free Summer விளிப்புணர்வு முதல் வாரத்தில், மஞ்சல் பெட்டிக்குள் வாகனத்தை நிறுத்துல் தொடர்பாகவும், இரண்டாவது வாரத்தில், வாகனங்களை செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவித்தல் தொடர்பாகவும், கடந்த மூன்றாவது வாரத்தில் சீட்பெல்ட் அணிதல் பற்றியும் வலியுறுத்தப்பட்டன.
இந்த நான்காவது வாரத்தில் முறையான வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துல் பற்றிய விளிப்புணர்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் படி வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ளவர்கள் கட்டாயமாக எந்நேரமும் தங்களுடன் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உரிய அனுமதிப்பத்திரத்தின் பிரதிகள் (PHOTO COPY) போக்குவரத்துப் போலிஸாரால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதாகவும், மேலும் போக்குவரத்து குற்றம் பதிவு செய்யப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment