Sunday, July 29, 2018

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா விமான சேவை

, 29 JULY 2018 -

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இரண்டு மாடிக் கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணம் யுத்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசம் என்பதனால், அதனை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய மாற்றுத் திட்டங்கள் உள்ளன.

இதற்கமைய, சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய கடந்த தினங்களில் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய போக்குவரத்து துறையே பிரச்சினையாக உள்ளது.

எனவே, கிழக்கில் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், சுற்றுலாத்துறை ஊடாக பலருக்கு வாழ்வாதாரம் மேம்படும்.

இதேநேரம், மத்தல விமான நிலையத்தை மீள ஆரம்பிப்பதும் கிழக்கிற்கு  சாதகமாக அமையும்.

இதனூடாக சுற்றுலாத்துறையை மேலும் பலப்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment