Saturday, July 28, 2018

அரசாங்கம் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை

28 JULY 2018

மாகாணசபை தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் பற்றி கூறுகின்ற போதே அரசாங்கம் அச்சம் அடைகிறது.

மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் தமது அணி பாரிய வெற்றியை பெறும் எனவும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment