Friday, July 27, 2018

கலைஞரை ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா! கோபாலபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்


July 27, 2018

கலைஞர் கருணாநிதியை ஒரு ஓரமாக நின்று பார்த்துவிட்டு போயிடுறேன் பா என்று மூதாட்டி ஒருவர் கோபால புரம் வீட்டிற்கு வந்து சென்ற சம்பவம் திமுக தொண்டர்களை நெகிழ வைத்துள்ளது.

கருணாநிதி உடல் நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருவதால், எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் திமுக தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கலைஞர் இருக்கும் வீட்டிற்கு 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். அப்போது அவரிடம் தொண்டர்கள் கேள்வி எழுப்பிய போது, கருணாநிதி உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் இன்று அதிகாலையே பஸ் ஏறி சென்னைக்கு வந்துவிட்டேன் எனவும் அதன் பின் முகவரி கேட்டு ஒரு வழியாக இங்கு வந்துவிட்டேன்.

ஒரேயொரு தடவ அவர ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான் பா என்று தொண்டர்களிடம் கெஞ்ச உடனடியாக இதை கவனித்த தி.மு.க எம்.எல்.ஏ பி.கே.சேகர் பாபு, அவரை மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதன் பின் வெளியே வந்த மூதாட்டியிடம் கேட்ட போது, கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரை இப்போது பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் கூறியதாகவும், அதன் பின் அவரிடம் போக்குவரத்திற்கு பணம் கொடுத்து அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment