Tuesday, July 31, 2018

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதிய திட்டம்

01.08 2018

அதிவேக நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வனப்பகுதிகளை உருவாக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் வழிநடத்தல் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அனுர மான்னப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டபோது அழிக்கப்பட்ட வனப்பகுதிகளை மீள உருவாக்கும் நோக்கில் நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, காய்க்காத மரங்களை நடுவதற்கு இராணுவத்தினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் அனுர மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment