Sunday, July 29, 2018

நல்லாட்சி அரசாங்கம் முட்டாள்தனமாகச் செயற்படுகின்றது ; அமைச்சர் ராஜித சேனாரத்ன…!

JULY 29, 2018

நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தாமல் நல்லாட்சி அரசாங்கம் முட்டாள்தனமாகச் செயற்படுகின்றது என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விடயங்கள் கடந்த அரசாங்கத்திற்கே நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த அரசாங்கத்திற்கே நல்ல பெயர் கிடைக்கின்றது.

மக்களுக்கான பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் அவை குறித்த தெளிவுபடுத்தல்கள் மக்களைச் சென்றடைவதில்லை. இது அரசாங்கம் செய்யும் முட்டாள்தனமான செயற்பாடாகும்.

இதனால், அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பிரதமரிடம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Kalmunai Today

0 comments:

Post a Comment