July 28 2018
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தங்களில் முஸ்லிம் பராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அக்கறை கொள்ளாதுள்ளமையை நேற்று முன்தினம் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் தொடர்பான கூட்டம் நிரூபித்துள்ளது.
இச்சந்திப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்றது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் சந்திப்பில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே சமுகமளித்தனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரே சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் ஷரீஆவுக்கு அமைவாகவே இடம்பெறவேண்டுமென வலியுறுத்தினர்.
"எமது மூதாதையர்கள் எமக்கு அழகாக கையளித்து விட்டுச்சென்றுள்ள சட்டத்தில் கை வைத்து நாம் பழுதாக்கிவிடக்கூடாது" என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கருத்தை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆமோதித்தனர்.
Thanks - Vidivelli
0 comments:
Post a Comment