Thursday, July 26, 2018

தீர்மானமின்றி நிறைவடைந்த கட்சித்தலைவர்கள் கூட்டம்


26-07.2018

மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்பது குறித்த முடிவு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து ஆராயப்பட்டதாக, இதில் கலந்துக் கொண்ட, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், எதிர்வரும் புதன்கிழமை கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டத்தை நடத்த பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment