Sunday, July 29, 2018

சட்டவிரோதமாக வீட்டுக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சரின் சாரதிக்கு விளக்கமறியல்


July 29, 2018

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவின் வீட்டிற்குள் தேர்று அதிகாலை மதில் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த  இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிரிஷ்ணனின் சாரதியை பொலிஸார் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிரிஹான பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29) அதிகாலை 3.00 மணியளவில் குறித்த நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எந்த நோக்கத்திற்காக குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவின் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. 

0 comments:

Post a Comment