Tuesday, July 31, 2018

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்கு- கூட்டு எதிர்க் கட்சி தீர்மானம்

July 31, 2018

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இருக்கும் நிலையில் அதனை உரிய நேரத்தில் நடாத்தாமல் பிற்போட்டு வரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அமர்வுகள் இவ்வாரத்துடன் நிறைவடைவதாகவும் புதிய அமர்வு ஆரம்பிக்கும் ஆகஸ்ட் மாதத்தில் இவ்வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

0 comments:

Post a Comment